கட்டணமில்லா பேருந்து சேவை என்பதால் பெண்களை பேருந்து நிறுத்தத்தில் ஏற்ற மறுப்பதாக குற்றம் சாட்டி, மதுரை அருகே அரசு பேருந்துகளை பொது மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம் மற்றும் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் ராயபாளையம் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இதில், பயணம் செய்யும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களை பேருந்து ஓட்டுநர் தரக்குறைவாக பேசுவதாகக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.