நாட்டில் பெண்களுக்கான சமூகத்தை மேம்படுத்த, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என இந்திய வீரங்கனை மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை நொளம்பூரில் தனியார் கல்வி நிறுவனம் சார்பில், பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு மனு பாக்கர் பதில் அளித்தார்.
பிரதமர் போனில் அழைத்து பேசியது குறித்த கேள்விக்கு, பதக்கம் வென்றதற்காக பாராட்டியதாகவும், அடுத்தடுத்த பயணங்களுக்கு வாழ்த்துக்களையும் பிரதமர் மோடி தெரிவித்தாக மனு பாக்கர் கூறினார்.
மேலும், மற்ற நாடுகளை போன்று, இளம் வயதிலேயே விளையாட்டு துறையை தேர்ந்தெடுக்கும் திட்டங்களை நம் நாட்டிலும் தொடங்க வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனு பாக்கர்,
வினேஷ் போகத்தை எப்போதும் போராளியாகவே பார்ப்பதாகவும், அவர் எல்லா சிரமங்களையும் சமாளிக்க தகுதியானவர் எனவும் கூறினார். தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசிய மனு பாக்கர், நாம் அனைவரும் இணைந்து சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றும், நாம் முன்னேற்ற பாதையில் உள்ளோம் எனவும் பதிலளித்தார்.