ராஜஸ்தானிலிருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட 1.6 டன் ஆட்டு இறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஜெய்ப்பூரில் இருந்து அனுராத் விரைவு ரயிலில், ஆயிரத்து 600 கிலோ ஆட்டு இறைச்சிகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது.
இதனை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், இறைச்சிகளுக்கு முறையான மருத்துவ சான்றிதழ் இல்லை என்பது தெரியவந்தது.
முறையாக பதப்படுத்தாமல் கொண்டு வரப்பட்ட இறைச்சிகள், உயர்தர ஓட்டல்கள் நட்சத்திர விடுதிகள் கொண்டு செல்லப்பட இருந்ததாக கூறப்படுகிறது.
5 நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்ட இறைச்சி என்பதால், காலாவதி ஆகியுள்ளதா என்பதை கண்டறிய சோதனைக்காக அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.