தஞ்சையில், காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால்,
ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து விவசாய பணிகளுக்காக காவிரி ஆற்றில் 18 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
இதனால், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆறுகளில் தண்ணீர் முழுமையாக செல்கிறது.
கொள்ளிடம் ஆற்றிலும் நீரின் வேகம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் யாரும் ஆழமான நீர்நிலைப் பகுதிகளில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பிரியா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.