தனித்தன்மையோடு பாஜக வளர்ந்து வருகிறது! - தமிழிசை சௌந்தரராஜன்
Aug 14, 2025, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனித்தன்மையோடு பாஜக வளர்ந்து வருகிறது! – தமிழிசை சௌந்தரராஜன்

Web Desk by Web Desk
Aug 20, 2024, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெருந்தன்மையோடு ராஜ் நாத் சிங் இங்கு வந்ததை போலவே முதல்வர் ஸ்டாலினும் பெருந்தன்மையுடன் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று தமிழகத்திற்கு என்ன வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும் எனப் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தை திமுகவினர் முற்றுகையிட்ட சேதப்படுத்தினர். இது தொடர்பாக அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சாட்சி அளிக்க இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்தார்.

சாட்சியை அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழில் சௌந்தரராஜன்,

23.09.2007 அன்று கமலாலயம் திராவிட முன்னேற்ற கழகத்தினரால் தாக்கப்பட்டது. கல்கத்தாவில் ஏதோ ஒரு சாமியார் ஏதோ ஒரு கருத்தை தெரிவித்தார் என்பதனால் வன்முறையாக அன்றைய பாஜக அலுவலகத்தை திமுகவினர் தாக்கினார்கள்.

பாஜக அலுவலகத்தின் கண்ணாடி உடைந்தது. அலுவலகத்தினால் இருந்த எங்களுக்கு காயம் ஏற்பட்டது. அன்றைய தினம் நான் பொதுச் செயலாளராக இருந்தேன். அப்போது கையில் அடிபட்டு அதனால் வீக்கம் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். கற்களை கொண்டு தாக்கி அலுவலகத்திற்குள் புகுந்து அனைவரையும் தாக்க முயற்சி செய்தார்கள். நாங்கள் தடுத்ததால் அவர்களால் அலுவலகத்திற்குள் வர முடியவில்லை.

அன்றைய மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் 500 முதல் 1000 பேர் தெருவோரத்தில் நின்று பத்து பதினைந்து பேரை தாக்குதல் நடத்த ஏவினார்கள். அன்றைய பொழுது இந்த சம்பவம் இரு மிகப் பெரிய தாக்குதலாக இருந்தது.

வன்முறை அரசியலில் எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது. பாஜகவின் வளர்ச்சியின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு பாஜகவினர்மீது தாக்குதல் ஏற்படுத்தினால் கட்சியின் வளர்ச்சியை தடுக்கலாம் என செய்த தாக்குதல்தான் இந்த தாக்குதல்.

தாக்குதலின் போது என்னோடு நின்ற தொண்டர்கள் குறிப்பாக பெண்கள் நின்றார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நெடுங்காலமாக பாஜகவுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த விதத்திலும் வன்முறை அரசியல் இருக்கக் கூடாது என்பதனை அழுத்தமாக பதிவு செய்கிறேன்.

தாக்குதல் சமயத்தில் எனக்கு ஏற்பட்ட காயத்தின் உட்காயம் சரியானாலும் வெளிகாயம் இன்னும் ஆறாமல் இருக்கிறது. இந்த தாக்குதல் நடந்த சமயத்தில் மருத்துவராக இருந்தேன். எனக்கு ஏற்பட்ட காயத்தினால் என்னால் என்னுடைய மருத்துவ வேலையை செய்ய முடியாமல் போனது. ஆனாலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டோம்.

இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடக்கக்கூடாது நடந்ததற்கான சாட்சியை இப்போது நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறேன். எந்த விதத்திலும் அரசியலில் வன்முறை இருக்கக்கூடாது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன். அப்போது இருந்தது போல இல்லாமல் திமுக மாற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

நாணய வெளியிட்டு விழா மிகவும் வெளிப்படையாகவே நடந்தது. மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து நடத்தும் விழாவாகவே இது இருந்தது. மாநில அரசு கோரிக்கை வைத்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் வந்தார். இது அரசு விழா அரசியல் விழா அல்ல அரசு விழாவை அரசு விழாவாகவும் அரசியல் விழாவை அரசியல் விழாவாகவும் பார்க்க வேண்டும். இப்படியான ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை உருவாக வேண்டும் என நான் நீண்ட காலமாக காத்திருந்தேன்.

பாரதப் பிரதமர் அண்ணன் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கலைஞர் பற்றிய நல்ல தன்மைகளை எடுத்துக் கூறியிருக்கிறார். இப்படி ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை வரவேண்டும் என நினைக்கிறேன். மாற்றுக் கட்சி தலைவரிடம் இருக்கும் நல்ல தன்மையை எடுத்துச் சொல்வதில் தவறில்லை. அதனால் அவர்களது கொள்கை, நடைமுறை அரசியல் நடைமுறையில் ஒத்துக்கொள்கிறோம் என்று அர்த்தமில்லை.

அப்படி பார்த்தால் இங்கு இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் மோடி அவர்களை விமர்சித்திருக்கிறார்கள். பாரதப் பிரதமர் அரசியல் நாகரீகத்தோடு நடந்து கொண்டார் அரசு விழா அரசியல் விழாவாக விவாதம் ஆக்கப்படக்கூடாது. அரசு விழாவை சுற்றி சுற்றி அரசியலுக்குள் கொண்டு வருகிறார்கள். மோடியை கோ பேக் என யாரும் சொல்ல முடியாது அப்படி சொல்பவர்களே அவரை வரவேற்கும் நிலை வரும்.

எதிர்வினை அரசியலை செய்வதை விட முதல்வரோ பிரதமரோ வந்தால் அவரை வரவேற்று நேர்மறை அரசியலை செய்ய வேண்டும். ராஜ்நாத் சிங் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று வணங்கியதை மரியாதை ஆகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்திற்கு கலைஞர் ஆற்றிய தொண்டினை எடுத்து சொல்வதனை தவறாக பார்க்க முடியாது. அரசு வேரு அரசியல் வேறு இந்த இணக்கம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

இதனை அன்பு உணர்ச்சியாக பார்க்க வேண்டுமே தவிர காழ்புணர்ச்சியாக பார்க்கக் கூடாது. நாணய வெளியீட்டு விழாவிற்கு பெருந்தன்மையோடு ராஜ் நாத் சிங் இங்கு வந்ததை போலவே முதல்வர் ஸ்டாலினும் பெருந்தன்மையுடன் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று தமிழகத்திற்கு என்ன வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும்.

கூட்டணி குறித்து நாங்கள் சொல்ல முடியாது.. தனித்தன்மையோடு பாஜக வளர்ந்து வருகிறது. அரசு விழாவில் இருவர் வந்தாலே கூட்டணி என்று சொல்லி விட முடியாது . கூட்டணி என்பது அரசியல் நிகழ்வுகளை பார்த்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பது அதை இப்பொழுதே சொல்ல முடியாது என்றார்.

Tags: BJP is growing with uniqueness! - Tamilisai Soundararajan
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Next Post

அமரர் சோ ராமசாமியின் மனைவி காலமானார்! – அண்ணாமலை இரங்கல்!

Related News

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

‘100 அடி’ ஆழிப்பேரலையால் அதிர்ந்த கடற்கரை : மக்களை திடுக்கிடச் செய்த திடீர் நிலச்சரிவு!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

Load More

அண்மைச் செய்திகள்

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

ரூ.60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்தா மீது வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies