போலந்து நாட்டில் இருந்து ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் என்ற சொகுசு ரயில் மூலம் பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார்.
அரசு முறை பயணமாக போலந்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 23ம் தேதி ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் என்ற சொகுசு ரயில் மூலமாக உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குச் செல்கிறார்.
இந்த ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் சொகுசு ரயிலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் போன்ற உலகத் தலைவர்கள் சென்றுள்ளனர்.
குறிப்பாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது சர்வதேச ராஜதந்திர பயணங்களுக்கு இந்த சொகுசு ரயிலை அடிக்கடி பயன்படுத்தி வருகிறார்.
இந்த சொகுசு ரயிலில், மரத்தாலான அறைகள், முக்கியமான கூட்டங்களை நடத்த பெரிய மேசை, ஷோபா மற்றும் டிவி உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.
மேலும், உறங்குவதற்கான அறை அதிகபட்ச வசதியை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் இந்த சொகுசு ரயில் பயணம் ஏறக்குறைய ஏழு மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.