சென்னையும் புனித ஜார்ஜ் கோட்டையும் - ஓர் பார்வை!
Mar 15, 2026, 06:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையும் புனித ஜார்ஜ் கோட்டையும் – ஓர் பார்வை!

Murugesan M by Murugesan M
Aug 22, 2024, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளமாக, தமிழக ஆட்சியாளர்களின் ஆட்சி பீடமாக, எதிர்கால சந்ததியினருக்கு வரலாறாக திகழும் புனித ஜார்ஜ் கோட்டை குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் சென்னை தின கொண்டாட்ட தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

கடலலைகள் வாசலிலே தண்ணீர் திவலைகளைத் தூவிட, வீசுகின்ற கடல் காற்று உப்புச்சுவை பெற்று உலா வரும் இடமான வங்கக் கடல் விளிம்பில் சென்னையின் வரலாற்றுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது புனித ஜார்ஜ் கோட்டை.

எத்தனையோ ஆண்டுகள்….. எவ்வளவோ ஆட்சியாளர்கள்…. எண்ணற்ற வாக்குவாதங்கள்… எண்ணிலடங்கா சட்டங்கள்…. அத்தனையையும் எதிகொண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க வசீகரத்தோடு காட்சியளிக்கும் புனித ஜார்ஜ் கோட்டை சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளமாக இருந்து வருகிறது.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையான கொல்கத்தாவிலுள்ள வில்லியம் கோட்டை காலப்போக்கில் சிதைந்துவிட, இரண்டாவதாக கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை என்றென்றும் அசைக்க முடியாத கோட்டையாக வானளவு உயர்ந்து நிற்கிறது.

1640ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை, தொடக்கத்தில் வணிக மேம்பாட்டிற்காக கட்டப்பட்டது எனக் கூறினாலும், உண்மையில் ராணுவப் படைக்கலன்கள் வைத்து பாதுகாக்கும் இடமாகவே இருந்திருக்கிறது. இக்கோட்டையில் உள்ள பல கட்டடங்கள் பண்டைய நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் வரலாற்று ஆவணங்களாக இன்றளவும் திகழ்ந்து வருகின்றன.

1687ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையில் நாட்டிலேயே உயரமான மரத்திலான கொடிக்கம்பத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் கொடி முதன்முதலில் ஏற்றி வைக்கப்பட்டது. தற்போது இடத்தில் தான் இந்தியாவின் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது.

புனித ஜார்ஜ் கோட்டைக்குள் ராணுவ அலுவலகங்களும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகமும், மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வு அலுவலகங்களும், அருங்காட்சியகமும் அமைந்துள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க அழகிய சட்டப்பேரவை மாமன்ற அறைக்குள் கண்ணைக் கவரும் மரவேலைப்பாடுகளும், உயரத்திலிருந்து கலைநயமிக்க அழகுடன் தொங்கும் விளக்குகளும், நாற்புறமும் இருக்கும் எழில்மிகு மாடங்களும் காண்போரை கவர்ந்திழுக்கும் பேரழகு கொண்டது.

புனித ஜார்ஜ் கோட்டையே இன்றைய சென்னை மாநகரம் உருவாக அடிப்படை காரணம் என சொல்லப்படும் அளவிற்கு சிறப்பு பெற்றது. எதிர்கால சந்ததியினருக்கு வரலாறாகவும், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் தீட்டப்படும் அமுதசுரபியாகவும் விளங்கும் புனித ஜார்ஜ் கோட்டையின் புகழ் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும்.

Tags: Chennaiinevitable symbol of ChennaiSt. George's Fort
ShareTweetSendShare
Previous Post

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Next Post

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்வுக்கு ரூ. 2 கோடி பரிசு : கேரள அரசு அறிவிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies