சென்னையும் புனித ஜார்ஜ் கோட்டையும் - ஓர் பார்வை!
Aug 6, 2025, 01:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையும் புனித ஜார்ஜ் கோட்டையும் – ஓர் பார்வை!

Web Desk by Web Desk
Aug 22, 2024, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளமாக, தமிழக ஆட்சியாளர்களின் ஆட்சி பீடமாக, எதிர்கால சந்ததியினருக்கு வரலாறாக திகழும் புனித ஜார்ஜ் கோட்டை குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் சென்னை தின கொண்டாட்ட தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

கடலலைகள் வாசலிலே தண்ணீர் திவலைகளைத் தூவிட, வீசுகின்ற கடல் காற்று உப்புச்சுவை பெற்று உலா வரும் இடமான வங்கக் கடல் விளிம்பில் சென்னையின் வரலாற்றுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது புனித ஜார்ஜ் கோட்டை.

எத்தனையோ ஆண்டுகள்….. எவ்வளவோ ஆட்சியாளர்கள்…. எண்ணற்ற வாக்குவாதங்கள்… எண்ணிலடங்கா சட்டங்கள்…. அத்தனையையும் எதிகொண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க வசீகரத்தோடு காட்சியளிக்கும் புனித ஜார்ஜ் கோட்டை சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளமாக இருந்து வருகிறது.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையான கொல்கத்தாவிலுள்ள வில்லியம் கோட்டை காலப்போக்கில் சிதைந்துவிட, இரண்டாவதாக கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை என்றென்றும் அசைக்க முடியாத கோட்டையாக வானளவு உயர்ந்து நிற்கிறது.

1640ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை, தொடக்கத்தில் வணிக மேம்பாட்டிற்காக கட்டப்பட்டது எனக் கூறினாலும், உண்மையில் ராணுவப் படைக்கலன்கள் வைத்து பாதுகாக்கும் இடமாகவே இருந்திருக்கிறது. இக்கோட்டையில் உள்ள பல கட்டடங்கள் பண்டைய நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் வரலாற்று ஆவணங்களாக இன்றளவும் திகழ்ந்து வருகின்றன.

1687ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையில் நாட்டிலேயே உயரமான மரத்திலான கொடிக்கம்பத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் கொடி முதன்முதலில் ஏற்றி வைக்கப்பட்டது. தற்போது இடத்தில் தான் இந்தியாவின் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது.

புனித ஜார்ஜ் கோட்டைக்குள் ராணுவ அலுவலகங்களும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகமும், மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வு அலுவலகங்களும், அருங்காட்சியகமும் அமைந்துள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க அழகிய சட்டப்பேரவை மாமன்ற அறைக்குள் கண்ணைக் கவரும் மரவேலைப்பாடுகளும், உயரத்திலிருந்து கலைநயமிக்க அழகுடன் தொங்கும் விளக்குகளும், நாற்புறமும் இருக்கும் எழில்மிகு மாடங்களும் காண்போரை கவர்ந்திழுக்கும் பேரழகு கொண்டது.

புனித ஜார்ஜ் கோட்டையே இன்றைய சென்னை மாநகரம் உருவாக அடிப்படை காரணம் என சொல்லப்படும் அளவிற்கு சிறப்பு பெற்றது. எதிர்கால சந்ததியினருக்கு வரலாறாகவும், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் தீட்டப்படும் அமுதசுரபியாகவும் விளங்கும் புனித ஜார்ஜ் கோட்டையின் புகழ் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும்.

Tags: Chennaiinevitable symbol of ChennaiSt. George's Fort
ShareTweetSendShare
Previous Post

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Next Post

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்வுக்கு ரூ. 2 கோடி பரிசு : கேரள அரசு அறிவிப்பு!

Related News

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies