சென்னையும் புனித ஜார்ஜ் கோட்டையும் - ஓர் பார்வை!
Aug 6, 2026, 12:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையும் புனித ஜார்ஜ் கோட்டையும் – ஓர் பார்வை!

Murugesan M by Murugesan M
Aug 22, 2024, 02:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளமாக, தமிழக ஆட்சியாளர்களின் ஆட்சி பீடமாக, எதிர்கால சந்ததியினருக்கு வரலாறாக திகழும் புனித ஜார்ஜ் கோட்டை குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் சென்னை தின கொண்டாட்ட தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

கடலலைகள் வாசலிலே தண்ணீர் திவலைகளைத் தூவிட, வீசுகின்ற கடல் காற்று உப்புச்சுவை பெற்று உலா வரும் இடமான வங்கக் கடல் விளிம்பில் சென்னையின் வரலாற்றுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது புனித ஜார்ஜ் கோட்டை.

எத்தனையோ ஆண்டுகள்….. எவ்வளவோ ஆட்சியாளர்கள்…. எண்ணற்ற வாக்குவாதங்கள்… எண்ணிலடங்கா சட்டங்கள்…. அத்தனையையும் எதிகொண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க வசீகரத்தோடு காட்சியளிக்கும் புனித ஜார்ஜ் கோட்டை சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளமாக இருந்து வருகிறது.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையான கொல்கத்தாவிலுள்ள வில்லியம் கோட்டை காலப்போக்கில் சிதைந்துவிட, இரண்டாவதாக கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை என்றென்றும் அசைக்க முடியாத கோட்டையாக வானளவு உயர்ந்து நிற்கிறது.

1640ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை, தொடக்கத்தில் வணிக மேம்பாட்டிற்காக கட்டப்பட்டது எனக் கூறினாலும், உண்மையில் ராணுவப் படைக்கலன்கள் வைத்து பாதுகாக்கும் இடமாகவே இருந்திருக்கிறது. இக்கோட்டையில் உள்ள பல கட்டடங்கள் பண்டைய நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் வரலாற்று ஆவணங்களாக இன்றளவும் திகழ்ந்து வருகின்றன.

1687ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையில் நாட்டிலேயே உயரமான மரத்திலான கொடிக்கம்பத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் கொடி முதன்முதலில் ஏற்றி வைக்கப்பட்டது. தற்போது இடத்தில் தான் இந்தியாவின் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது.

புனித ஜார்ஜ் கோட்டைக்குள் ராணுவ அலுவலகங்களும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகமும், மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வு அலுவலகங்களும், அருங்காட்சியகமும் அமைந்துள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க அழகிய சட்டப்பேரவை மாமன்ற அறைக்குள் கண்ணைக் கவரும் மரவேலைப்பாடுகளும், உயரத்திலிருந்து கலைநயமிக்க அழகுடன் தொங்கும் விளக்குகளும், நாற்புறமும் இருக்கும் எழில்மிகு மாடங்களும் காண்போரை கவர்ந்திழுக்கும் பேரழகு கொண்டது.

புனித ஜார்ஜ் கோட்டையே இன்றைய சென்னை மாநகரம் உருவாக அடிப்படை காரணம் என சொல்லப்படும் அளவிற்கு சிறப்பு பெற்றது. எதிர்கால சந்ததியினருக்கு வரலாறாகவும், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் தீட்டப்படும் அமுதசுரபியாகவும் விளங்கும் புனித ஜார்ஜ் கோட்டையின் புகழ் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும்.

Tags: Chennaiinevitable symbol of ChennaiSt. George's Fort
Share
Tweet
SendShare
Previous Post

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Next Post

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்வுக்கு ரூ. 2 கோடி பரிசு : கேரள அரசு அறிவிப்பு!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies