விண்ணில் கோலோச்சும் இந்தியா!: நிலவில் சந்திரயான் கால்பதித்த தினம்!
Jan 14, 2026, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்ணில் கோலோச்சும் இந்தியா!: நிலவில் சந்திரயான் கால்பதித்த தினம்!

Murugesan M by Murugesan M
Aug 23, 2024, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 23ம் தேதி, சந்திரயான் – 3 வெற்றிகரமாக தனது விக்ரம் லேண்டரை, நிலவில் தரையிறக்கிய தினம், தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது.
சந்திரயான் – 3 வெற்றியால் விண்வெளித்துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், விக்ரம் லேண்டரை, கடந்த ஆண்டு இதே நாள் நிலவின் தெற்குப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தது.

இதன் மூலம் உலகிலேயே இந்தியா தான் நிலவின் தென்துருவத்தில் கால்வைத்த முதல் நாடு, மற்றும் நிலவில் கால் வைத்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

சந்திரயான் – 3, வெற்றியும் அதனை கொண்டாடும் இந்த தேசிய விண்வெளி தினமும் , இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினத்தின் கருப்பொருளாக ‘நிலவைத்தொடும் வேளையில், வாழ்வைத் தொடுவது – இந்தியாவின் விண்வெளி சரித்திரம்’ என அமைக்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில், இந்தியாவின் திறமையை வெளிப்படுத்திய சந்திரயான் – 3, திட்டம், விடாமுயற்சி, துல்லியமான அணுகுமுறை என்பதன் எடுத்துக்காட்டாக உள்ளது.

நிலவின் தரைப்பகுதியில் ஆழம் செல்லச் செல்ல வெப்பநிலை மிக அதிகமாக குறைகிறது என்பதை ரோவர் கண்டறிந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பின்படி நிலவின் மேற்பரப்பு 50 டிகிரி செல்சியஸ்ஸாகவும், 2 செமீ ஆழத்தில் 30 முதல் 40 டிகிரி செல்சியஸாகவும், 6 செமீ ஆழத்தில் 0 முதல் -10 டிகிரி செல்சியஸாகவும் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

சல்பர், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், உள்ளிட்ட பல்வேறு கனிமங்கள் நிலவில் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது. மேலும் பகுப்பாய்வில் மாங்கனீசு, சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக நிலவின் தென் துருவத்தில் டைட்டேனியம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள் எதிர்கால ஆய்வுகளுக்கு முக்கிய அடித்தளமாக அமைந்திருக்கிறது.

மேலும் உருகிய பாறைகளின் கடல் சந்திரனின் தென் துருவத்தை மூடியது, 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்ற கண்டுபிடிப்பு, சந்திரனின் புவியியல் வரலாற்றைப் பற்றிய புதிய பரிமாணமாக கருதப்படுகிறது.

சந்திரயான்-3 இல் தொடங்கிய பயணம், 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் விண்வெளி நிலையத்தை நிறுவுவது மற்றும் 2040ஆம் ஆண்டு முதல் இந்தியர் நிலவில் தரையிறங்குவது உள்ளிட்ட பல லட்சிய இலக்குகளை வைத்திருக்கிறது.

2022ம் ஆண்டு தேசிய புவியியல் கொள்கை, 2023ம் ஆண்டில் புதிய விண்வெளிக் கொள்கை மற்றும் அன்னிய நேரடி முதலீட்டு (FDI) கொள்கையில் திருத்தங்கள் போன்ற மத்திய அரசின் முக்கிய நடவடிக்கைகள் இந்தியாவின் விண்வெளி துறைக்கு செய்த பெரும் உதவியாகும்.

2024ம் ஆண்டு பட்ஜெட்டில் விண்வெளித்துறைக்கு 1000 கோடி ரூபாய்க்கான மூலதன நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. மேலும் விரிவான புவி கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதற்கான பொதுதுறையுடன் தனியார் நிறுவனங்களும் இணைந்த செயல்பட அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இந்திய தேசிய விண்வெளி தினம், வரும் தலைமுறையை அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணிதத்தில் தங்களின் எதிர்காலத்தை உருவாக்கவும் இந்தியாவின் எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு பங்களிக்கவும் உறுதுணையாக இருக்க வழி காட்டுகிறது.

Tags: India is booming in the sky!: The day Chandrayaan set foot on the moon!
ShareTweetSendShare
Previous Post

என்ன சொல்கிறார் விஜய்! : தவெக கொடியின் குறியீடு என்ன?

Next Post

சீனாவிற்கு “டப்” ! : உலக வர்த்தகத்தை கைப்பற்றும் இந்தியா!

Related News

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies