விண்ணில் கோலோச்சும் இந்தியா!: நிலவில் சந்திரயான் கால்பதித்த தினம்!
Nov 12, 2025, 09:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்ணில் கோலோச்சும் இந்தியா!: நிலவில் சந்திரயான் கால்பதித்த தினம்!

Web Desk by Web Desk
Aug 23, 2024, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 23ம் தேதி, சந்திரயான் – 3 வெற்றிகரமாக தனது விக்ரம் லேண்டரை, நிலவில் தரையிறக்கிய தினம், தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது.
சந்திரயான் – 3 வெற்றியால் விண்வெளித்துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், விக்ரம் லேண்டரை, கடந்த ஆண்டு இதே நாள் நிலவின் தெற்குப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தது.

இதன் மூலம் உலகிலேயே இந்தியா தான் நிலவின் தென்துருவத்தில் கால்வைத்த முதல் நாடு, மற்றும் நிலவில் கால் வைத்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

சந்திரயான் – 3, வெற்றியும் அதனை கொண்டாடும் இந்த தேசிய விண்வெளி தினமும் , இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினத்தின் கருப்பொருளாக ‘நிலவைத்தொடும் வேளையில், வாழ்வைத் தொடுவது – இந்தியாவின் விண்வெளி சரித்திரம்’ என அமைக்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில், இந்தியாவின் திறமையை வெளிப்படுத்திய சந்திரயான் – 3, திட்டம், விடாமுயற்சி, துல்லியமான அணுகுமுறை என்பதன் எடுத்துக்காட்டாக உள்ளது.

நிலவின் தரைப்பகுதியில் ஆழம் செல்லச் செல்ல வெப்பநிலை மிக அதிகமாக குறைகிறது என்பதை ரோவர் கண்டறிந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பின்படி நிலவின் மேற்பரப்பு 50 டிகிரி செல்சியஸ்ஸாகவும், 2 செமீ ஆழத்தில் 30 முதல் 40 டிகிரி செல்சியஸாகவும், 6 செமீ ஆழத்தில் 0 முதல் -10 டிகிரி செல்சியஸாகவும் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

சல்பர், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், உள்ளிட்ட பல்வேறு கனிமங்கள் நிலவில் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது. மேலும் பகுப்பாய்வில் மாங்கனீசு, சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக நிலவின் தென் துருவத்தில் டைட்டேனியம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள் எதிர்கால ஆய்வுகளுக்கு முக்கிய அடித்தளமாக அமைந்திருக்கிறது.

மேலும் உருகிய பாறைகளின் கடல் சந்திரனின் தென் துருவத்தை மூடியது, 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்ற கண்டுபிடிப்பு, சந்திரனின் புவியியல் வரலாற்றைப் பற்றிய புதிய பரிமாணமாக கருதப்படுகிறது.

சந்திரயான்-3 இல் தொடங்கிய பயணம், 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் விண்வெளி நிலையத்தை நிறுவுவது மற்றும் 2040ஆம் ஆண்டு முதல் இந்தியர் நிலவில் தரையிறங்குவது உள்ளிட்ட பல லட்சிய இலக்குகளை வைத்திருக்கிறது.

2022ம் ஆண்டு தேசிய புவியியல் கொள்கை, 2023ம் ஆண்டில் புதிய விண்வெளிக் கொள்கை மற்றும் அன்னிய நேரடி முதலீட்டு (FDI) கொள்கையில் திருத்தங்கள் போன்ற மத்திய அரசின் முக்கிய நடவடிக்கைகள் இந்தியாவின் விண்வெளி துறைக்கு செய்த பெரும் உதவியாகும்.

2024ம் ஆண்டு பட்ஜெட்டில் விண்வெளித்துறைக்கு 1000 கோடி ரூபாய்க்கான மூலதன நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. மேலும் விரிவான புவி கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதற்கான பொதுதுறையுடன் தனியார் நிறுவனங்களும் இணைந்த செயல்பட அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இந்திய தேசிய விண்வெளி தினம், வரும் தலைமுறையை அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணிதத்தில் தங்களின் எதிர்காலத்தை உருவாக்கவும் இந்தியாவின் எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு பங்களிக்கவும் உறுதுணையாக இருக்க வழி காட்டுகிறது.

Tags: India is booming in the sky!: The day Chandrayaan set foot on the moon!
ShareTweetSendShare
Previous Post

என்ன சொல்கிறார் விஜய்! : தவெக கொடியின் குறியீடு என்ன?

Next Post

சீனாவிற்கு “டப்” ! : உலக வர்த்தகத்தை கைப்பற்றும் இந்தியா!

Related News

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

டெல்லி சம்பவம் தவியாய் தவிக்கும் குடும்பங்கள் : கண்ணீரில் உழலும் உறவுகள் – பெருந்துயர் நீங்குமா?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

ஆம்னி பேருந்து பிரச்சினை : எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

பண்டிகை காலங்களில் மல்லிகை பூ, விமான டிக்கெட்டின் விலை உயரவில்லையா? – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேள்வி!

சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனை!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி : பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு – 44 பாலங்களை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை : குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு!

செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு – பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies