சென்னை அருகே Youtube -ஐ பார்த்து கடைகளில் ஷட்டர் உடைத்து கொள்ளையடித்த திருடனை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிக்கரணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், இரவு நேரங்களில் கடைகளின் ஷட்டரை உடைத்து கடையில் உள்ள பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றதாக புகார் எழுந்தது.
அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், ஆவடி, காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த மன்மதன் என்கிற மதன் என்பரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.