பழனியில் நடைபெறும் உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகம் வந்த ஜப்பான் பெண்மணி பக்தி பாடலை தமிழில் பாடி அசத்தினார்.
பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பங்கேற்க ஜப்பானை சேர்ந்த 55 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தடைந்தனர்.
இதனையடுத்து சென்னையில் தங்கி பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். அப்போது ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் ஓம் நமசிவாய, ஓம் சரவணபவா என்ற பக்தி பாடலை தமிழில் பாடி அசத்தினார். மேலும், தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பை அவர்கள் தெளிவாக கூறியது காண்போரை மெய்சிலிர்க்க செய்தது.