வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக நெல்லையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் பிராந்திய மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தென் தமிழகம் மற்றும் கேரளாவில் ஏற்படும் பேரிடர் சவால்களை சமாளிக்கும் வகையில் நெல்லையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் பிராந்திய மையம் அமைகிறது.
மையம் அமைப்பதற்கான நிரந்தர இடம் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிகமாக ராதாபுரம் மாணவர்கள் விடுதியில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு 24 மணி நேரம் பணியில் இருக்கும் வகையில் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதி நவீன மீட்பு உபகரணங்கள், தொலைதொடர்பு சாதனங்களுடன், ரசாயனம், கதிரியக்கம் மற்றும் உயிரியல் சார்ந்த பேரிடர்களை சமாளிக்கும் வகையில் இந்த மையம் அமைகிறது.