அடுத்த 10 ஆண்டுகளில் 9 -5 பணிகள் இருக்காது - நிபுணர்கள் கருத்து!
Oct 26, 2025, 05:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 10 ஆண்டுகளில் 9 -5 பணிகள் இருக்காது – நிபுணர்கள் கருத்து!

Web Desk by Web Desk
Aug 30, 2024, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த 10 ஆண்டுகளில் 9 முதல் 5 மணி வரையிலான வேலைகள் இருக்காது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சொன்னாலும் கூட இன்று எல்லாத் துறைகளிலும் பெண்களும் பனி புரிகின்றனர். எல்லா வகையிலும் வேலை என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. ஏற்கெனவே AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வருகையால், குறைந்த திறன் உடைய வேலைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் தான், LinkedIn சமூக ஊடக நிறுவனத்தின் இணை நிறுவனரான Reid Hoffman, 2034 ஆம் ஆண்டுக்குள் காலை 9 மணி முதல் 5 மணி வரையிலான வேலைகள் இல்லாமல் போகும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேட் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற அரசின் முயற்சிகளால், புதிய புதிய தொழில்துறைகள்,வேகமாக வளர்ந்து வருகின்றன. சர்வதேச வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் கிக் பொருளாதாரம் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் பெரும் பங்களித்து வருகிறது.

தாங்கள் விரும்பிய நேரத்தில் விரும்பிய பணியை, விரும்பிய நேரத்தில் செய்து கொள்ளும் இந்தமுறை கிக் என அழைக்கப்படுகிறது. குறைவான நேரத்தில் சரியான வருவாய் ஈட்ட முடிவதால் உலகம் முழுவதும் Gen Z தொழிலாளர்கள் இதனை நோக்கி ஆர்வத்துடன் செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

மேலும் அழுத்தமான வேலை நேரங்கள் ஊழியர்களின் வேலைத் திறனைப் பாதிப்பதாகவும், Flextime உற்பத்தித்திறனை அதிகம் மேம்படுத்துவதாகவும் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், பாரம்பரியமான வேலை நேரங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது என்று மனிதவள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உற்பத்தித் துறை,சில்லறை விற்பனை, வாடிக்கையாளர் சேவை போன்ற துறைகளில் சில பணியிடங்களுக்கான தேவை இனி இருக்காது. மேலும் வளர்ந்து வரும் புதிய தொழில் துறைகளான மென்பொருள் தொழில் நுட்பம் , இன்சூரன்ஸ், ஃபைனான்ஸ் மற்றும் இ-காமர்ஸ் ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பணி அழுத்தங்களுக்கு நடுவிலும் ஒரு உணர்வு பூர்வமான பணியாளர்களை உருவாக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை முறைப்படுத்தி வளர்த்தெடுக்கவும் 9 முதல் 5 மணி வரையிலான வேலை நேரம் இன்றியமையாதது என்று கூறும் சமூகவியல் ஆய்வாளர்கள், எப்படிப் பார்த்தாலும் இந்தியாவில் பாரம்பரியமான வேலை நேரம் தான் பாதுகாப்பானது என்று தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்வதால், வேலைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையை உருவாக்கும் எனக் கருதப்பட்டாலும், நீண்ட வேலை நேரத்தால் , அதிருப்தி, சோர்வு என உளவியல் ரீதியான ஆபத்தான உருவாக்கலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.

Tags: LinkedIn9am to 5am job is likely to disappear.Start Up IndiaArtificial intelligence9 to 5 jobs
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி கோயலில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம் – தேவஸ்தானம் அறிவிப்பு!

Next Post

நியூயார்க்கில் நடைபெறும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 24,000 பேர் முன்பதிவு!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies