அடுத்த 10 ஆண்டுகளில் 9 -5 பணிகள் இருக்காது - நிபுணர்கள் கருத்து!
Aug 15, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 10 ஆண்டுகளில் 9 -5 பணிகள் இருக்காது – நிபுணர்கள் கருத்து!

Murugesan M by Murugesan M
Aug 30, 2024, 10:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடுத்த 10 ஆண்டுகளில் 9 முதல் 5 மணி வரையிலான வேலைகள் இருக்காது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சொன்னாலும் கூட இன்று எல்லாத் துறைகளிலும் பெண்களும் பனி புரிகின்றனர். எல்லா வகையிலும் வேலை என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. ஏற்கெனவே AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வருகையால், குறைந்த திறன் உடைய வேலைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் தான், LinkedIn சமூக ஊடக நிறுவனத்தின் இணை நிறுவனரான Reid Hoffman, 2034 ஆம் ஆண்டுக்குள் காலை 9 மணி முதல் 5 மணி வரையிலான வேலைகள் இல்லாமல் போகும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேட் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற அரசின் முயற்சிகளால், புதிய புதிய தொழில்துறைகள்,வேகமாக வளர்ந்து வருகின்றன. சர்வதேச வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் கிக் பொருளாதாரம் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் பெரும் பங்களித்து வருகிறது.

தாங்கள் விரும்பிய நேரத்தில் விரும்பிய பணியை, விரும்பிய நேரத்தில் செய்து கொள்ளும் இந்தமுறை கிக் என அழைக்கப்படுகிறது. குறைவான நேரத்தில் சரியான வருவாய் ஈட்ட முடிவதால் உலகம் முழுவதும் Gen Z தொழிலாளர்கள் இதனை நோக்கி ஆர்வத்துடன் செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

மேலும் அழுத்தமான வேலை நேரங்கள் ஊழியர்களின் வேலைத் திறனைப் பாதிப்பதாகவும், Flextime உற்பத்தித்திறனை அதிகம் மேம்படுத்துவதாகவும் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், பாரம்பரியமான வேலை நேரங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது என்று மனிதவள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உற்பத்தித் துறை,சில்லறை விற்பனை, வாடிக்கையாளர் சேவை போன்ற துறைகளில் சில பணியிடங்களுக்கான தேவை இனி இருக்காது. மேலும் வளர்ந்து வரும் புதிய தொழில் துறைகளான மென்பொருள் தொழில் நுட்பம் , இன்சூரன்ஸ், ஃபைனான்ஸ் மற்றும் இ-காமர்ஸ் ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பணி அழுத்தங்களுக்கு நடுவிலும் ஒரு உணர்வு பூர்வமான பணியாளர்களை உருவாக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை முறைப்படுத்தி வளர்த்தெடுக்கவும் 9 முதல் 5 மணி வரையிலான வேலை நேரம் இன்றியமையாதது என்று கூறும் சமூகவியல் ஆய்வாளர்கள், எப்படிப் பார்த்தாலும் இந்தியாவில் பாரம்பரியமான வேலை நேரம் தான் பாதுகாப்பானது என்று தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்வதால், வேலைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையை உருவாக்கும் எனக் கருதப்பட்டாலும், நீண்ட வேலை நேரத்தால் , அதிருப்தி, சோர்வு என உளவியல் ரீதியான ஆபத்தான உருவாக்கலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.

Tags: LinkedIn9am to 5am job is likely to disappear.Start Up IndiaArtificial intelligence9 to 5 jobs
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி கோயலில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம் – தேவஸ்தானம் அறிவிப்பு!

Next Post

நியூயார்க்கில் நடைபெறும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 24,000 பேர் முன்பதிவு!

Related News

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் கோலாகலம் – டெல்லி செங்கோட்டையில் 13-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

1000 அடி தேசியக் கொடியுடன் நடந்த நிகழ்ச்சி; மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

டாடா சன்ஸ் குழும புதிய தலைவர் யார்? : சந்திரசேகரன் ராஜினாமா செய்தது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

நடுவானில் திகில் சம்பவம் : சட்டென 300 அடி சரிந்த Air India விமானம் : சிறப்பு தொகுப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் ரத்தக்குழாய்களில் இரு இடங்களில் அடைப்பு – மருத்துவர்கள் உறுதி!

பெரம்பலூர் அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!

சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின கொண்டாட்டம் : முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிப்பு!

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் – தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

இன்றைய தங்கம் விலை!

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies