சீனாவில் அதிகரிக்கும் வேலையின்மை - காரணம் என்ன?
Aug 22, 2025, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் அதிகரிக்கும் வேலையின்மை – காரணம் என்ன?

Web Desk by Web Desk
Aug 30, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரும்பாலான வேலையில்லாத சீன இளைஞர்களை சமூக ஊடகங்கள்  அழுகிய வால் குழந்தைகள் என்று புதுப் பெயரிட்டு அழைக்கின்றன. சீனாவில் வேலையின்மை அதிகரிப்பிற்கு என்ன காரணம்? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு…

2021ம் ஆண்டிலிருந்து சீனாவின் பொருளாதாரத்தை பாதித்த பல்லாயிரக்கணக்கான கட்டி முடிக்கப்படாத வீடுகளுக்கு “அழுகிய வால் கட்டிடங்கள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அதே போல் இப்போது ஏராளமான சீன இளைஞர்கள் வேலையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்/ எனவே அவர்கள் அழுகிய வால் குழந்தைகள் என்று அழைக்கப் படுகிறார்கள்.

கொரொனா காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, நாட்டில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. அதற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்த்திருந்த சீன இளைஞர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

இந்த ஆண்டு சீனாவில் அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் வேலை தேடியும் வேலை கிடைக்கவில்லை என்கின்றனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதன்முறையாக 16-24 வயதுடைய சுமார் 100 மில்லியன் சீன இளைஞர்களின் வேலையின்மை 20 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்தது. 2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு 21.3 சதவீதத்தைத் தாண்டி வளர்ந்தது.

தொடரும் இந்த மோசமான சூழ்நிலையில் சீன இளைஞர்களுக்கு வேலையின்மை ஒரு பெரும் தலைவலியாகவே உள்ளது.

இந்த ஜூலை மாதத்தில்  11.79 மில்லியன் சீன கல்லூரி மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்குச் செல்ல காத்திருக்கிறார்கள். ஆனால் நாட்டின் வேலையின்மை சுமார் 17.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.  ரியல் எஸ்டேட் நெருக்கடியால் சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் சொல்லப் படுகிறது.

வேலை கிடைக்காத சீன இளைஞர்களில் பலர் தங்கள் பெற்றோரின் ஓய்வூதியம் மற்றும் சேமிப்பை நம்பி வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

கல்வி பயில பல ஆண்டுகளைச் செலவழித்து முதுகலை பட்டம் பெற்ற நிலையிலும் சீன இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாக இருக்கிறது.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவது அரசின் முன்னுரிமையாக இருக்கும் என்று கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங், அதற்கான திட்டங்களையும் வழிமுறைகளையும் உருவாக்கிய போதிலும் வேலையின்மை  அதிகரித்து வருகிறது .

1999 ஆம் ஆண்டில், சீனா தனது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்த படித்த ஊழியர்களை உருவாக்க நினைத்தது. பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்கள் சேர்க்கை அளவை கூட்டியது.

ஆனால் சீன அரசு, பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கோட்டைவிட்டது. அடுத்த பத்து ஆண்டுகளில் சீனாவில் புதிய கல்லூரி பட்டதாரிகளின் எண்ணிக்கை சுமார் 18 மில்லியனாக கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அவநம்பிக்கையில் இருக்கும் வேலை தேடும் இளம் சீன இளைஞர்கள், மோசடி மற்றும் குற்றச் செயல்களில் திசை மாறவும் வாய்ப்பிருப்பதாக சமூக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

Tags: chinaunemployedcorona lockdownchina youths
ShareTweetSendShare
Previous Post

பாரிஸ் பாரா ஒலிம்பிக் – மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தின் T-35 பிரிவில் பிரீத்தி பால் வெண்கலம் வென்று அசத்தல்!

Next Post

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies