ரஷ்யாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் கம்கட்சா பிராந்தியத்துக்கு உட்பட்ட வச்கஸட்ஸ் பகுதியிலிருந்து நிகோலேவ்கா நோக்கி ஹெலிகாப்டர் ஒன்று உள்ளூர் நேரப்படி காலை 7.15 மணியளவில் புறப்பட்டது.
எரிமலை பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்து அந்த ஹெலிகாப்டர் மாயமானது.
இதனால் அதில் இருந்த மூன்று சிப்பந்திகள் உள்ளிட்ட 22 பேரின் நிலைமை கேள்விக்குறியானது. ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, அதன் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது கண்டறியப்பட்டது. அதில் இருந்த 22 பேரும் உயிரிழந்ததாக கூறிய மீட்புக்குழுவினர், தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.