பாகிஸ்தானில் செகண்ட் ஹேண்ட் துணிகள் மற்றும் பொருட்களை விற்கும் வணிக வளாகம் திறக்கப்பட்ட 30 நிமிடங்களுக்குள் மொத்தமாக பொருள்களை பொதுமக்கள் அள்ளிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் ட்ரீம் பஜார் என்ற புதிய வணிக வளாக திறப்பு விழாவையொட்டி, ஆரம்ப சலுகையாக இந்திய மதிப்பில் 15 ரூபாய்க்கும் குறைவாக பொருட்கள் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து மாலின் முன்பு திரண்ட ஆயிரக்கணக்கானோர் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, துணிகள், பொருட்கள் என அனைத்தையும் திருடி அதை வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். . அரை மணி நேரத்தில் மொத்த மாலும் காலி செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.