சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அலுவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு செய்யும் இளம் ராணுவ அலுவலர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய ராணுவ இளம் அதிகாரிகளுக்கான ஒரு வருட பயிற்சி நிறைவு பெற்றதையடுத்து அவர்களுக்கான லெப்டினன் பொறுப்புகள் நாளை வழங்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை பரங்கிமலையில் உள்ள அலுவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இளம் ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஜிம்னாஸ்டிக், தற்காப்பு கலைகள், குதிரையேற்றம், எதிரிகளின் கூடாரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் தகர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தி காட்டப்பட்டன.