நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை வென்ற திருச்சி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேபாளத்தில் நடைபெற்ற போட்டியில், சிலம்பம் பிரிவில் ஜெகதீஷ் மற்றும் நவீன்ராஜ் ஆகிய இருவரும் தங்கப் பதக்கம் வென்றனர். ஹேம்ராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார். பதக்கம் வென்று நாடு திரும்பிய கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.