நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த சன்மானத்தை தான் பயின்ற அம்மாபேட்டை அரசு பள்ளிக்கு வழங்கிய ஆசிரியர் செந்தில்குமாருக்கு, சக ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அரசு நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுவித்தல் ஆசிரியராக செந்தில்குமார் பணியாற்றி வருகிறார். இவரது சீரிய கல்வி சேவையை பாராட்டும் வகையில் தமிழக அரசால் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்நிலையில், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் செந்தில்குமாருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது ஆசிரியர் செந்தில்குமாருக்கு கிரீடம் அணிவித்து மாணவர்கள், சக ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
இதனை அடுத்து தனக்கு விருதாக கிடைத்த ரொக்கம் பத்தாயிரம் ரூபாயை தான் பயின்ற அள்ளிகுட்டை ஊராட்சி ஒன்றிய தொடங்க பள்ளிக்கும், அம்மாபேட்டை அரசு நகரவை மேல்நிலைப் பள்ளிக்கும் செந்தில்குமார் வழங்கினார்.