திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்டவைகளுக்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.