கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் நோயாளிகள் பதறியடித்து வெளியே ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்துசெல்லும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது.
இதனால் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் பெண்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் என அனைவரும் மருத்துவமனையில் இருந்து வெளியே ஓடினர். இதனையடுத்து கசிவு ஏற்பட்ட சிலிண்டரை நிறுத்திய பின்னர் நோயாளிகள் நிம்மதியடைந்தனர்.