தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 10ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமான வெள்ளையன் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.
பிச்சிவிளை கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வெள்ளையன் உடலுக்கு அமைச்சர்கள் அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.
பாஜக பிரமுகர்கள், வியாபாரிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.