திருச்சியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் எடை குறைவாக இருப்பதாக கூறி மாணவ – மாணவிகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடு சிலம்ப போட்டியில் பள்ளி மாணவ – மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
அப்போது சில மாணவர்கள் எடை குறைவாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். விதிமுறைகள் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகவில்லை எனக் கூறி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாணவர்கள் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.