அறநிலையத்துறையின் ஊழல் குறித்து பேசியதற்காக தம் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் 7 ஆம் ஆண்டு விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் சிலை கரைப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஹெச்.ராஜா பங்கேற்றார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது :
மகாவிஷ்னுவை இந்த திராவிட மாடல் அரசு விஷ்னுவாகவே மாற்றிவிட்டது என்றும் பெரியார், கருணாநிதி குறித்த பாடங்களை மாணவர்கள் படிக்க வைத்துள்ளது. அதனை படித்தால் மாணவர்கள் கெட மாட்டார்களா? என கேள்வி எழுப்பினார்ல.
மகாவிஷ்னு மீது நடவடிக்கை எடுத்த இந்த அரசு, திருச்சி பள்ளியில் நடைபெற்ற 40 மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேச மறுக்கிறது என்றார். அடுத்த முறை விநாயகர் சிலைகள் தற்போதைய எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு வைக்க வேண்டும் என்றும் அதற்கு பயப்பட கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்து அறநிலையத்துறையில் ஊழல் என பேசினேன் என்பதற்காக என் மீது 480 அதிகாரிகள் 27 இடங்களில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் அதற்கு நான் பயப்படமாட்டேன் என்றும் ஹெச். ராஜா தெரிவித்தார்.இந்த நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் மற்றும் பா.ஜ.கவினர் பங்கேற்றனர்.