மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திமுக கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து உணவு மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருமங்கலம் அடுத்த வில்லூரில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில் மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. ]
இதனை சாப்பிட்டபின் ஒருசிலர் பார்சல் வாங்கிக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இந்நிலையில் பிரியாணி சாப்பிட்ட 40க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பிரியாணி, முட்டை, தண்ணீர் பாட்டில் ஆகிய உணவு மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.