விநாயகர் சதுர்த்தி திருவிழா - ரூ. 400.58 கோடிக்கு காப்பீடு!
Jul 1, 2025, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி திருவிழா – ரூ. 400.58 கோடிக்கு காப்பீடு!

Web Desk by Web Desk
Sep 14, 2024, 08:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிரிக்கெட், கால்பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் பெரிய இசை நிகழ்ச்சிக காப்பீடு செய்யப்படுவது வழக்கம். முதன்முறையாக , 5 நாட்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு, அதிக பட்சமாக 400.58 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்குப் பெயர் பெற்ற மாநிலம் மகாராஷ்ட்ரா தான். மும்பையில் 2,000க்கும் மேற்பட்ட சர்வஜனக் கணபதி மண்டலங்கள் உள்ளன. எனினும், கவுட் சரஸ்வத் பிராமின் என்ற ஜிஎஸ்பி சேவா மண்டலின் மகாகணபதி, மும்பையின் கிங்ஸ் சர்க்கிளில் உள்ள இந்தியாவின் பணக்கார விநாயகர் சிலை என்று அழைக்கப்படுகிறார்.

66 கிலோவுக்கும் மேலான தங்க ஆபரணங்கள், 325 கிலோவுக்கும் மேலான வெள்ளி நகைகள் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களால் இந்த விநாயகர் அலங்கார விநாயகராக விளங்குகிறார்.

எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திய இந்த விநாயகரை பக்தர்கள் நவசலா பாவனாரா விஸ்வாச்சா ராஜா என்று போற்றுகிறார்கள்.

ஜிஎஸ்பி சேவா மண்டலத்தில், இந்த ஆண்டு, மகாகணபதியின் 70வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படுகிறது.

மகாகணபதியின் ஒவ்வொரு பக்தரையும் பாதுகாப்பது முதன்மையான பொறுப்பு என்ற அடிப்படையில், சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு 360.40 கோடி ரூபாய்க்கு காப்பீட்டு செய்திருந்தார்கள்.

அதுவே இந்த ஆண்டு, 5 நாட்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு 400.58 கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுத்துள்ளனர் இந்த ஜிஎஸ்பி சேவா மண்டலத்தினர்.

திருவிழாக் காப்பீடு என்பது பொதுவாக விநாயகப் பெருமானின் சிலையை அலங்கரிக்கும் தங்க ஆபரணங்கள், பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பிற தொடர்புடைய அபாயங்கள் போன்ற அம்சங்களுக்கான உள்ளடக்கியதாகும்.

தங்கம், வெள்ளி மற்றும் நகைகளை உள்ளடக்கிய பல்வேறு ஆபத்துக்களுக்கு 43.15 கோடி ரூபாய்க்கு அனைத்து இடர் காப்பீடும், பூகம்ப அபாயத்துடன் கூடிய ஃபர்னிச்சர், ஃபிக்சர்ஸ் & ஃபிட்டிங்ஸ், கம்ப்யூட்டர்கள், CCTV கேமராக்கள், QR ஸ்கேனர்கள், பாத்திரங்கள், மளிகை சாமான்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றுக்கு 2 கோடி ரூபாய்க்கான காப்பீடும் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், பந்தல்கள், மைதானங்கள், பக்தர்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பொது பாதுகாப்புக்கு 30 கோடி ரூபாய்க்கான காப்பீடும், தன்னார்வலர்கள், அர்ச்சகர்கள், சமையல்காரர்கள், தொழிலாளர்கள், பாதுகாப்புக் காவலர்கள் போன்றவர்களுக்கு 325 கோடி ரூபாய்க்கான தனிப்பட்ட விபத்துக் காப்பீடு எடுக்கப்பட்டுள்ளன.

இதனுடன், விநாயகர் அமைக்கப்பட்ட வளாகத்திற்கான நிலையான தீ மற்றும் சிறப்பு ஆபத்துக்களுக்காக 43 லட்சத்துக்கான காப்பீடும் எடுக்கப்பட்டுள்ளன.

வங்கி லாக்கர்களில் இருந்து பந்தலுக்கு தங்க நகைகள் கொண்டு வரப்பட்டது முதல் பண்டிகை முடிந்து வங்கிக்குத் திரும்பும் வரையிலான முழு காலகட்டத்திற்கும் பிரீமியம் கணக்கிடப்படுகிறது என்று சொல்லப் பட்டாலும் பிரீமியம் தொகை எவ்வளவு என்பது வெளியிடப் படவில்லை.

2010 ஆம் ஆண்டிலிருந்து இந்த பணக்கார விநாயகர் மண்டலிக்கான காப்பீடு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் GSB சேவா மண்டலின் இன்சூரன்ஸ் பிரீமியம் வெறும் 5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் மண்டலியின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

விநாயகர் சதுர்த்தி,நவராத்திரி போன்ற திருவிழாக்கான காப்பீடு விஷயத்தில், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மற்றும் OIC போன்ற அரசு நடத்தும் காப்பீட்டு நிறுவனங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன.

சில நாட்களே இந்த திருவிழாக்கள் நடைபெறுகின்றன என்பதால் பெரிய லாபம் வராது என்று காரணத்தால் தனியார் காப்பீட்டாளர்கள் இந்தத் துறையைத் தவிர்க்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

Tags: Vinayagar Chaturthi festivalinsurancemumbaiMAHARASHTRA
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு அதிநவீன ஏவுகணை விற்பனை – அமெரிக்கா முடிவு!

Next Post

தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் தொடங்கியது குரூப்-2 தேர்வு!

Related News

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies