விநாயகர் சதுர்த்தி திருவிழா - ரூ. 400.58 கோடிக்கு காப்பீடு!
Mar 15, 2026, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி திருவிழா – ரூ. 400.58 கோடிக்கு காப்பீடு!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 08:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிரிக்கெட், கால்பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் பெரிய இசை நிகழ்ச்சிக காப்பீடு செய்யப்படுவது வழக்கம். முதன்முறையாக , 5 நாட்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு, அதிக பட்சமாக 400.58 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்குப் பெயர் பெற்ற மாநிலம் மகாராஷ்ட்ரா தான். மும்பையில் 2,000க்கும் மேற்பட்ட சர்வஜனக் கணபதி மண்டலங்கள் உள்ளன. எனினும், கவுட் சரஸ்வத் பிராமின் என்ற ஜிஎஸ்பி சேவா மண்டலின் மகாகணபதி, மும்பையின் கிங்ஸ் சர்க்கிளில் உள்ள இந்தியாவின் பணக்கார விநாயகர் சிலை என்று அழைக்கப்படுகிறார்.

66 கிலோவுக்கும் மேலான தங்க ஆபரணங்கள், 325 கிலோவுக்கும் மேலான வெள்ளி நகைகள் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களால் இந்த விநாயகர் அலங்கார விநாயகராக விளங்குகிறார்.

எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திய இந்த விநாயகரை பக்தர்கள் நவசலா பாவனாரா விஸ்வாச்சா ராஜா என்று போற்றுகிறார்கள்.

ஜிஎஸ்பி சேவா மண்டலத்தில், இந்த ஆண்டு, மகாகணபதியின் 70வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படுகிறது.

மகாகணபதியின் ஒவ்வொரு பக்தரையும் பாதுகாப்பது முதன்மையான பொறுப்பு என்ற அடிப்படையில், சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு 360.40 கோடி ரூபாய்க்கு காப்பீட்டு செய்திருந்தார்கள்.

அதுவே இந்த ஆண்டு, 5 நாட்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு 400.58 கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுத்துள்ளனர் இந்த ஜிஎஸ்பி சேவா மண்டலத்தினர்.

திருவிழாக் காப்பீடு என்பது பொதுவாக விநாயகப் பெருமானின் சிலையை அலங்கரிக்கும் தங்க ஆபரணங்கள், பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பிற தொடர்புடைய அபாயங்கள் போன்ற அம்சங்களுக்கான உள்ளடக்கியதாகும்.

தங்கம், வெள்ளி மற்றும் நகைகளை உள்ளடக்கிய பல்வேறு ஆபத்துக்களுக்கு 43.15 கோடி ரூபாய்க்கு அனைத்து இடர் காப்பீடும், பூகம்ப அபாயத்துடன் கூடிய ஃபர்னிச்சர், ஃபிக்சர்ஸ் & ஃபிட்டிங்ஸ், கம்ப்யூட்டர்கள், CCTV கேமராக்கள், QR ஸ்கேனர்கள், பாத்திரங்கள், மளிகை சாமான்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றுக்கு 2 கோடி ரூபாய்க்கான காப்பீடும் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், பந்தல்கள், மைதானங்கள், பக்தர்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பொது பாதுகாப்புக்கு 30 கோடி ரூபாய்க்கான காப்பீடும், தன்னார்வலர்கள், அர்ச்சகர்கள், சமையல்காரர்கள், தொழிலாளர்கள், பாதுகாப்புக் காவலர்கள் போன்றவர்களுக்கு 325 கோடி ரூபாய்க்கான தனிப்பட்ட விபத்துக் காப்பீடு எடுக்கப்பட்டுள்ளன.

இதனுடன், விநாயகர் அமைக்கப்பட்ட வளாகத்திற்கான நிலையான தீ மற்றும் சிறப்பு ஆபத்துக்களுக்காக 43 லட்சத்துக்கான காப்பீடும் எடுக்கப்பட்டுள்ளன.

வங்கி லாக்கர்களில் இருந்து பந்தலுக்கு தங்க நகைகள் கொண்டு வரப்பட்டது முதல் பண்டிகை முடிந்து வங்கிக்குத் திரும்பும் வரையிலான முழு காலகட்டத்திற்கும் பிரீமியம் கணக்கிடப்படுகிறது என்று சொல்லப் பட்டாலும் பிரீமியம் தொகை எவ்வளவு என்பது வெளியிடப் படவில்லை.

2010 ஆம் ஆண்டிலிருந்து இந்த பணக்கார விநாயகர் மண்டலிக்கான காப்பீடு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் GSB சேவா மண்டலின் இன்சூரன்ஸ் பிரீமியம் வெறும் 5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் மண்டலியின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

விநாயகர் சதுர்த்தி,நவராத்திரி போன்ற திருவிழாக்கான காப்பீடு விஷயத்தில், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மற்றும் OIC போன்ற அரசு நடத்தும் காப்பீட்டு நிறுவனங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன.

சில நாட்களே இந்த திருவிழாக்கள் நடைபெறுகின்றன என்பதால் பெரிய லாபம் வராது என்று காரணத்தால் தனியார் காப்பீட்டாளர்கள் இந்தத் துறையைத் தவிர்க்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

Tags: mumbaiMAHARASHTRAVinayagar Chaturthi festivalinsurance
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு அதிநவீன ஏவுகணை விற்பனை – அமெரிக்கா முடிவு!

Next Post

தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் தொடங்கியது குரூப்-2 தேர்வு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies