தேனியில் பணத்திற்காக பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தந்தை உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உப்புக்கோட்டை முத்தாலம்மன் கோவில் மேலத் தெருவைச் சேர்ந்த சங்கர் தனக்கு பிறந்த குழந்தையை 1 லட்சம் ரூபாய் பணத்திற்காக விற்பனை செய்ததாக தகவல் கசிந்தது.
இதனையடுத்து குழந்தை விற்பனை செய்யப்படவில்லை என்றும், சங்கரின் அண்ணனிடன் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர் சத்யா மேற்கொண்ட விசாரணையில் குழந்தை விற்பனை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த மகளிர் காவல்துறையினர், குழந்தையின் தந்தை சங்கர், குழந்தையை வாங்கிய சிவக்குமார் மற்றும் அவரது மனைவி உமாமகேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். மேலும், குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.