ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது : “ஓணம் பண்டிகையை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாபலி சக்கரவர்த்தியை, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் நேர்மை, இரக்கம், தியாகம் ஆகியவற்றின் விழுமியங்களையும் நாம் கொண்டாடும் இவ்வேளையில், இந்த அறுவடைத் திருவிழா அனைவருக்கும் அமைதி, வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டு வந்து, நம் அனைவருக்கும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வைத் தூண்டட்டும்” என அளுநர் ரவி தெரிவித்துள்ளார்.