ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டம் கார்போர் கிராமத்தில் அமைந்துள்ள சார்புஜா நாத் ஜி கோயிலில், ஜல்ஜுலானி ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கனவில் வந்த விஷ்ணுவிடம் இருந்து புனிதமான அறிவுரைகளைப் பெற்ற ஸ்ரீ கேங் தேவ் என்பவர் இந்த கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது.