நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் ஆராய்ச்சி என்ற பெயரில் அவ்வப்போது போர்க் கப்பலை அனுப்பி சீனா உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்குடனும் அமெரிக்காவிடம் இருந்து 33 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் எம்.கியூ-9பி ஹன்டர் – கில்லர் என்று அழைக்கப்படும் அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ட்ரோன்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்துக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அடுத்த மாதம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.