மங்களூரில் தடையை மீறி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டம் மங்களூரு பி.சி. சாலையில் மத ஊர்வலம் செல்லவுள்ளதாக பந்த்வால் டவுன் நகர கவுன்சிலின் முன்னாள் தலைவர் சமூக வலைதளத்தில் ஆடியோ வெளியிட்டதாக தெரிகிறது.
இதைக் கண்டித்து விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் அங்கு மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.