மகன்கள் மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்த காவல்துறை - பாடகர் மனோ மனைவி குற்றச்சாட்டு!
Aug 7, 2025, 12:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகன்கள் மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்த காவல்துறை – பாடகர் மனோ மனைவி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 17, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாடகர் மனோ மகன்கள்  மீதான புகார் தொடர்பாக காவல்துறையினர் அவசர கதியில் வழக்கு பதிவு செய்துள்ளதாக மனோவின் மனைவி ஜமீலா தெரிவித்துள்ளார். புதிய சிசிடிவி பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்டதாக மதுரவாயலைச் சேர்ந்த கிருபாகரன் என்ற இளைஞரும், 16 வயது சிறுவனும் கடந்த வாரம் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனோவின் மகன்களான சாஹிர், ரஃபீக் ஆகியோர் தலைமறைவான நிலையில், மனோவின் மகன்கள் தங்களை மதுபோதையில் தாக்கியதாக புகார் அளித்தவர்கள் குற்றச்சாட்டினர்.

இந்நிலையில் மனோவின் மகன்களும், புகார் அளித்த எதிர்தரப்பினரும் மோதிக்கொள்ளும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சிகளில் பாடகர் மனோவின் மகன்களை ஒரு இளைஞர் விரட்டிச்சென்று தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகள் தொடர்பாக பேட்டியளித்துள்ள பாடகர் மனோவின் மனைவி ஜமீலா, தன்னிடம் ஆதாரம் இல்லாததால்தான் இதுவரை பேசவில்லை என்றும், தற்போது உண்மை என்ன என்பதை புதிய வீடியோவில் அவைரும் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தங்களிடம் விசாரிக்காமல் அவசர கதியில் வழக்குப்பதிவு செய்ததாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தால் தனது மகன்கள் எங்கு உள்ளார்கள் என்பது கூட தமக்கு தெரியவில்லை என வேதனை தெரிவித்த அவர், இந்த வீடியோவை பார்த்துவிட்டாவது மகன்கள் நேரில் வர வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து பேசிய மனோவின் மருமகள், தனது கணவர் மற்றும் அவரது அண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என தெரிவித்தார்.

தாக்குதலின் பின்னணியில் வேறு ஏதோ காரணம் உள்ளது என்றும், தனது மாமனாரின் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் நடந்ததாக தெரிகிறது எனவும் குற்றம்சாட்டினார். மேலும், வீட்டில் தனியாக இருப்பதால், தங்களின் பாதுகாப்பு கருதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், தனது கணவர் மற்றும் அவரது அண்ணன் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags: Chennaisinger manocase aganist mano sonsmano wife jameela
ShareTweetSendShare
Previous Post

மீலாது நபி பெருநாள் – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ஆத்தூர் அருகே இருதரப்பினர் மோதல் – விசாரிக்க சென்ற காவல் அதிகாரி மீது தாக்குதல்!

Related News

மதுரை : கள்ளர் விடுதி பெயர் மாற்றம் – சீர்மரபினர் நல சங்கம் ஆர்ப்பாட்டம்!

வங்கதேசம் : வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மதுரை : தங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் திமுக நிர்வாகி – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

சென்னை ஆர்.கே.நகர் : சாலையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்!

நீண்ட நெடிய தூக்கத்தில் இருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்து : கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த நரி!

தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள் – நயினார் நாகேந்திரன்!

விவசாயிகளின் நலனை காக்க எந்த விலையும் கொடுக்க தயார் – அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி மறைமுகமாக பதிலடி!

துறையூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலுக்குள் புகுந்த விபத்து – கர்ப்பிணி பலி!

போதை பழக்கத்தை தடுக்க துணிச்சல் இல்லாத திமுக அரசு – இபிஎஸ் விமர்சனம்!

ஹிரோஷிமா நகா் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 80-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிப்பு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளதாக தகவல்!

பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அகற்றம் தொடர்பான வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

கோவில் திருவிழா அனுமதி விவகாரம் –  காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies