மகன்கள் மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்த காவல்துறை - பாடகர் மனோ மனைவி குற்றச்சாட்டு!
Jun 14, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகன்கள் மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்த காவல்துறை – பாடகர் மனோ மனைவி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 17, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாடகர் மனோ மகன்கள்  மீதான புகார் தொடர்பாக காவல்துறையினர் அவசர கதியில் வழக்கு பதிவு செய்துள்ளதாக மனோவின் மனைவி ஜமீலா தெரிவித்துள்ளார். புதிய சிசிடிவி பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்டதாக மதுரவாயலைச் சேர்ந்த கிருபாகரன் என்ற இளைஞரும், 16 வயது சிறுவனும் கடந்த வாரம் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனோவின் மகன்களான சாஹிர், ரஃபீக் ஆகியோர் தலைமறைவான நிலையில், மனோவின் மகன்கள் தங்களை மதுபோதையில் தாக்கியதாக புகார் அளித்தவர்கள் குற்றச்சாட்டினர்.

இந்நிலையில் மனோவின் மகன்களும், புகார் அளித்த எதிர்தரப்பினரும் மோதிக்கொள்ளும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சிகளில் பாடகர் மனோவின் மகன்களை ஒரு இளைஞர் விரட்டிச்சென்று தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகள் தொடர்பாக பேட்டியளித்துள்ள பாடகர் மனோவின் மனைவி ஜமீலா, தன்னிடம் ஆதாரம் இல்லாததால்தான் இதுவரை பேசவில்லை என்றும், தற்போது உண்மை என்ன என்பதை புதிய வீடியோவில் அவைரும் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தங்களிடம் விசாரிக்காமல் அவசர கதியில் வழக்குப்பதிவு செய்ததாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தால் தனது மகன்கள் எங்கு உள்ளார்கள் என்பது கூட தமக்கு தெரியவில்லை என வேதனை தெரிவித்த அவர், இந்த வீடியோவை பார்த்துவிட்டாவது மகன்கள் நேரில் வர வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து பேசிய மனோவின் மருமகள், தனது கணவர் மற்றும் அவரது அண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என தெரிவித்தார்.

தாக்குதலின் பின்னணியில் வேறு ஏதோ காரணம் உள்ளது என்றும், தனது மாமனாரின் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் நடந்ததாக தெரிகிறது எனவும் குற்றம்சாட்டினார். மேலும், வீட்டில் தனியாக இருப்பதால், தங்களின் பாதுகாப்பு கருதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், தனது கணவர் மற்றும் அவரது அண்ணன் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags: Chennaisinger manocase aganist mano sonsmano wife jameela
ShareTweetSendShare
Previous Post

மீலாது நபி பெருநாள் – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ஆத்தூர் அருகே இருதரப்பினர் மோதல் – விசாரிக்க சென்ற காவல் அதிகாரி மீது தாக்குதல்!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies