சென்னை திருவொற்றியூர் அருகே வணிக வளாகம் கட்ட மாமூல் கேட்டு மிரட்டிய 6 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
எண்ணூர் விரைவுச் சாலையில் டி-மார்ட் என்னும் பிரபல வணிக வளாகத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கட்டடம் கட்ட மாமூல் கொடுக்க வேண்டும் எனக்கூறி, கட்டுமான நிறுவனத்தின் கண்காணிப்பாளரான சுரேஷ்குமாருக்கு 6 பேர் கொண்ட கும்பல் மிரட்டல் விடுத்தது.
இதுகுறித்து சுரேஷ் குமார் புகாரளித்த நிலையில், 6 பேரையும் கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.