இந்தியாவும் – சீனாவும் வளர்ச்சியின் பங்காளிகள் என இந்தியாவுக்கான சீன தூதர் சூஃபீஹாங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சீன தூதர் சூஃபிஹாங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சூஃபிஹாங், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் – பிரதமர் மோடியும் பல ஒருமித்த கருத்துக்களை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.
இருநாடுகளும் வளர்ச்சியின் பங்காளிகள் எனவும் சூஃபிஹாங் தெரிவித்தார். உலகளாவிய உற்பத்தி மையமாக மாற செயல்படும் இந்தியாவுடன், நவீனமயமாக்கல் அனுபவங்களை பரிமாறிக் கொள்ள சீனா தயாராக இருப்பதாகவும் சூஃபிஹாங் தெரிவித்தார்.