சா 'தீ' யால் சீரழியும் நெல்லை - இளம் குற்றவாளிகளாக மாறும் மாணவர்கள்!
Mar 15, 2026, 11:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சா ‘தீ’ யால் சீரழியும் நெல்லை – இளம் குற்றவாளிகளாக மாறும் மாணவர்கள்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பள்ளி கல்லூரிகளில் அதிகரிக்கும் சாதிய ரீதியிலான மோதல்கள் என சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நிறைந்த பகுதியாக திகழ்கிறது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதி. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்பட்ட பகுதி சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளின் புகழிடமாக மாறிவரும் நெல்லை மாவட்டம் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ஏராளமான கல்லூரிகள், எண்ணிலடங்கா கல்வி நிறுவனங்கள் என தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என சொல்லும் அளவிற்கு இருந்த நெல்லை பாளையங்கோட்டை பகுதி, தற்போது கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், சாதிய மோதல் என ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளின் புகழிடமாக மாறிவருகிறது.

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சக மாணவர்களாலே தாக்குதலுக்குள்ளான மாணவர் சின்னதுரையில் தொடங்கி, கடந்த சில தினங்களுக்கு முன் புத்தகப் பையில் அரிவாளை கொண்டு வந்த மாணவன் வரை அடுத்தடுத்து அரங்கேறக்கூடிய நிகழ்வுகள் பதபதப்பை ஏற்படுத்துகின்றன.

அதிகளவிலான கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய பாளையங்கோட்டையில் தொடர்ந்து நடைபெறக்கூடிய சாதி ரீதியிலான மோதல் சம்பவங்கள் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.

பாளையங்கோட்டை பள்ளி ஒன்றில் மாணவரை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய ஆசிரியர்கள், கல்லூரி மாணவியை மது அருந்த அழைத்த பேராசிரியர்கள் என மாணவர்களுக்கு நல்வழியை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே தவறான பாதைக்கு அழைக்கும் நிகழ்வுகள், பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பல வல்லுநர்கள், அறிஞர்கள், அரசியல் தலைவர்களை உருவாக்கிய நெல்லை மாவட்டம் தற்போது ஜாதி ரீதியிலான மோதல் சம்பவங்களை ஊக்குவித்து வருவது வேதனைக்குரியது என்கின்றனர் அம்மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள்

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கிடையே நிலவும் மோதல் சம்பவங்களில் அரசியல் கட்சியினரின் தலையீடு அதிகளவில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. பள்ளிகளுக்குள் அதிகரிக்கும் சாதிய, மோதல்களை அடியோடு தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே வருங்கால தலைமுறையை சிறந்த தலைமுறையாக உருவாக்க ஒரே தீர்வாக அமையும்.

Tags: educational institutestirunelvelilaw and orderpalayamkottaiOxford of South India
ShareTweetSendShare
Previous Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜா – காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

Next Post

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாத தாக்குதல் – பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் பலி!

Related News

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies