ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு- காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படையினர், பட்காம் மாவட்டம் பிரெல் வாட்டர்ஹெயில் பகுதியில் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் எல்லைப் பாதுகாப்பு படையினர் 3 பேர் உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர் உட்பட 32 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.