ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில் 40 ஆயிரம் பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், சூரன்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில் பயங்கரவாதம் அதிகரித்து, சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.
ஜம்மு- காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பஹாடி, குஜ்ஜார் மற்றும் பகர்வால் இன மக்களுக்கு வேலைவாய்ப்பில் மட்டுமல்லாமல், பணி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அமித் ஷா உறுதியளித்தார்.