திருநெல்வேலியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் மத்திய அமைச்சர் எல். முருகன் தலைமையில் நடைபெற்றது.
பாஜக சார்பில் நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய பின் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா முழுவதும் இதுவரை 4 கோடியே 50 லட்சம் பேர் பாஜக உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்றும், தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி பேரை பாஜகவில் இணைப்பதே இலக்கு எனவும் தெரிவித்தார்.