திருநெல்வேலியில் இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரத்தை காவல்துறை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி டவுண் பகுதியில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமினை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தியாகராஜ நகரில் இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குறியது என்றும், காவல்துறை இந்த விவகாரத்தை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
தானும் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் என்கவுன்ட்டர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்தார். மேலும், என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களே தவிர குற்றவாளிகள் கிடையாது என கூறிய எல்.முருகன், நீதித்துறை இருக்கும்போது காவல்துறை சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்தார்.