மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசும் இண்டி கூட்டணி தலைவர்கள் - பாஜக கண்டனம்!
Mar 15, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசும் இண்டி கூட்டணி தலைவர்கள் – பாஜக கண்டனம்!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசுவது வெட்கக்கேடானது என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா சாடியுள்ளார்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே பத்லாபூரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அக்‌ஷய் ஷிண்டே என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அக்‌ஷய் ஷிண்டே மீது அவரது இரண்டாவது மனைவி அளித்த புகாரின்பேரில், அவரை விசாரிக்க தலோஜா சிறையிலிருந்து பத்லாபூருக்கு காவல் வாகனத்தில் போலீசார் அழைத்து சென்றனர்.

மும்பை அருகே வந்தபோது திடீரென அவர், காவலரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி சரமாரியாகச் சுட ஆரம்பித்தார்.இதில் சில காவலர்கள் காயமடைந்த நிலையில், காவல் ஆய்வாளர் சஞ்சய் சுட்டதில் அக்‌ஷய் ஷிண்டே படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காவல்துறையினரின் துப்பாக்கியைப் பிடுங்கி குற்றவாளி சுட்டதால், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விளக்கமளித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததால் பத்லாபூர் மக்கள் நிம்மதியடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

குற்றவாளியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் இண்டியா கூட்டணி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேச தகுதியில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை காப்பாற்ற இண்டியா கூட்டணி முயன்றதாக சாடியுள்ள அவர், மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசுவது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ளார்.

Tags: exual assault of two girlsBadlapurmumbaiMAHARASHTRABJP National Spokesperson Shesad PoonawallaMumbai encounteAkshay Shinde
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!

Next Post

சீசிங் ராஜா என்கவுன்ட்டர் சீக்ரெட் – நீலாங்கரை அருகே நிஜத்தில் நடந்தது என்ன?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies