மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசும் இண்டி கூட்டணி தலைவர்கள் - பாஜக கண்டனம்!
Apr 29, 2026, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசும் இண்டி கூட்டணி தலைவர்கள் – பாஜக கண்டனம்!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசுவது வெட்கக்கேடானது என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா சாடியுள்ளார்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே பத்லாபூரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அக்‌ஷய் ஷிண்டே என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அக்‌ஷய் ஷிண்டே மீது அவரது இரண்டாவது மனைவி அளித்த புகாரின்பேரில், அவரை விசாரிக்க தலோஜா சிறையிலிருந்து பத்லாபூருக்கு காவல் வாகனத்தில் போலீசார் அழைத்து சென்றனர்.

மும்பை அருகே வந்தபோது திடீரென அவர், காவலரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி சரமாரியாகச் சுட ஆரம்பித்தார்.இதில் சில காவலர்கள் காயமடைந்த நிலையில், காவல் ஆய்வாளர் சஞ்சய் சுட்டதில் அக்‌ஷய் ஷிண்டே படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காவல்துறையினரின் துப்பாக்கியைப் பிடுங்கி குற்றவாளி சுட்டதால், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விளக்கமளித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததால் பத்லாபூர் மக்கள் நிம்மதியடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

குற்றவாளியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் இண்டியா கூட்டணி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேச தகுதியில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை காப்பாற்ற இண்டியா கூட்டணி முயன்றதாக சாடியுள்ள அவர், மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசுவது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ளார்.

Tags: exual assault of two girlsBadlapurmumbaiMAHARASHTRABJP National Spokesperson Shesad PoonawallaMumbai encounteAkshay Shinde
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!

Next Post

சீசிங் ராஜா என்கவுன்ட்டர் சீக்ரெட் – நீலாங்கரை அருகே நிஜத்தில் நடந்தது என்ன?

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies