மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசும் இண்டி கூட்டணி தலைவர்கள் - பாஜக கண்டனம்!
Jun 14, 2026, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசும் இண்டி கூட்டணி தலைவர்கள் – பாஜக கண்டனம்!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசுவது வெட்கக்கேடானது என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா சாடியுள்ளார்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே பத்லாபூரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அக்‌ஷய் ஷிண்டே என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அக்‌ஷய் ஷிண்டே மீது அவரது இரண்டாவது மனைவி அளித்த புகாரின்பேரில், அவரை விசாரிக்க தலோஜா சிறையிலிருந்து பத்லாபூருக்கு காவல் வாகனத்தில் போலீசார் அழைத்து சென்றனர்.

மும்பை அருகே வந்தபோது திடீரென அவர், காவலரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி சரமாரியாகச் சுட ஆரம்பித்தார்.இதில் சில காவலர்கள் காயமடைந்த நிலையில், காவல் ஆய்வாளர் சஞ்சய் சுட்டதில் அக்‌ஷய் ஷிண்டே படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காவல்துறையினரின் துப்பாக்கியைப் பிடுங்கி குற்றவாளி சுட்டதால், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விளக்கமளித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததால் பத்லாபூர் மக்கள் நிம்மதியடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

குற்றவாளியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் இண்டியா கூட்டணி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேச தகுதியில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை காப்பாற்ற இண்டியா கூட்டணி முயன்றதாக சாடியுள்ள அவர், மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசுவது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ளார்.

Tags: exual assault of two girlsBadlapurmumbaiMAHARASHTRABJP National Spokesperson Shesad PoonawallaMumbai encounteAkshay Shinde
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!

Next Post

சீசிங் ராஜா என்கவுன்ட்டர் சீக்ரெட் – நீலாங்கரை அருகே நிஜத்தில் நடந்தது என்ன?

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies