மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசும் இண்டி கூட்டணி தலைவர்கள் - பாஜக கண்டனம்!
Sep 13, 2026, 05:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசும் இண்டி கூட்டணி தலைவர்கள் – பாஜக கண்டனம்!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 01:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசுவது வெட்கக்கேடானது என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா சாடியுள்ளார்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே பத்லாபூரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அக்‌ஷய் ஷிண்டே என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அக்‌ஷய் ஷிண்டே மீது அவரது இரண்டாவது மனைவி அளித்த புகாரின்பேரில், அவரை விசாரிக்க தலோஜா சிறையிலிருந்து பத்லாபூருக்கு காவல் வாகனத்தில் போலீசார் அழைத்து சென்றனர்.

மும்பை அருகே வந்தபோது திடீரென அவர், காவலரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி சரமாரியாகச் சுட ஆரம்பித்தார்.இதில் சில காவலர்கள் காயமடைந்த நிலையில், காவல் ஆய்வாளர் சஞ்சய் சுட்டதில் அக்‌ஷய் ஷிண்டே படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காவல்துறையினரின் துப்பாக்கியைப் பிடுங்கி குற்றவாளி சுட்டதால், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விளக்கமளித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததால் பத்லாபூர் மக்கள் நிம்மதியடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

குற்றவாளியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் இண்டியா கூட்டணி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேச தகுதியில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை காப்பாற்ற இண்டியா கூட்டணி முயன்றதாக சாடியுள்ள அவர், மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசுவது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ளார்.

Tags: exual assault of two girlsBadlapurmumbaiMAHARASHTRABJP National Spokesperson Shesad PoonawallaMumbai encounteAkshay Shinde
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!

Next Post

சீசிங் ராஜா என்கவுன்ட்டர் சீக்ரெட் – நீலாங்கரை அருகே நிஜத்தில் நடந்தது என்ன?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies