கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணை அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.