மெய்யழகன் பட விழாவில் லட்டு குறித்த பேச்சு - வருத்தம் தெரிவித்தார் நடிகர் கார்த்தி!
Jan 14, 2026, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெய்யழகன் பட விழாவில் லட்டு குறித்த பேச்சு – வருத்தம் தெரிவித்தார் நடிகர் கார்த்தி!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லட்டு குறித்த நடிகர் கார்த்தியின் பேச்சுக்கு  ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாண்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெய்யழகன் படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று  நடைபெற்றது. அப்போது தொகுப்பாளர் லட்டு குறித்து கார்த்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கார்த்தி பதில் அளித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர துணை முதல்வர்  பவன் கல்யாண்,“சினிமா நிகழ்வில் லட்டு குறித்தது கிண்டல் செய்வீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர்கள் என்பதற்கா மரியாதை கொடுக்கிறேன்.

ஆனால், சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை நூறு முறை யோசித்து பேச வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதேபோல் நடிகர் பிரகாஷ் ராஜிற்கும் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தான் பேசியது குறித்து நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.  அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அன்புள்ள பவன் கல்யாண் அவர்களே, நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைப்பிடிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

இதேபோல திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணுக்கும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் இடையே பனிப்போர் வெடித்திருக்கிறது. லட்டு பிரச்னையை தேசிய விவகாரமாக்க வேண்டாம் என பவன் கல்யாணின் எக்ஸ் பதிவை சுட்டிக்காட்டி, பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்ததால், நேபாளத்திலிருந்து பிரகாஷ் ராஜ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது கருத்தை பவன் கல்யாண் தவறாக புரிந்துகொண்டது வியப்பளிப்பதாகவும், நாடு திரும்பியதும் தங்களது கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். அத்துடன் தாம் ஏற்கெனவே வெளியிட்ட பதிவுகளை மீண்டும் ஒருமுறை பார்க்குமாறு பிரகாஷ் ராஜ் கேட்டுக்கொண்டார்.

Tags: Karthitirupathy lattu issuePawan KalyanAndhra Deputy Chief Minister Pawan KalyanMeiyazhagan promotion
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு – கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு!

Next Post

இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயகே – ஈழத்தமிழர் ஆதரவு யாருக்கு ? சிறப்பு கட்டுரை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies