அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்! : பிரதமர் மோடி
Oct 9, 2025, 09:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்! : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Sep 25, 2024, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 18-ம் தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட தேர்தலில் 61 புள்ளி 38 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து, ஜம்மு பிராந்தியத்தில் 11 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 15 தொகுதிகள் என 26 தொகுதிகளில் இரண்டாவது கட்டமாக வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

2-ம் கட்டத் தேர்தலில் சுமார் 25 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 3 ஆயிரத்து 502 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பாஜக மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா, அப்னி கட்சித் தலைவர் அல்டாஃப் புகாரி உள்ளிட்ட 239 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலைச் சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என்பதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், ராணுவ வீரர்கள், துணை ராணுவத்தினர், காவல் துறையினர் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், தீவிரவாதம் இல்லாத மற்றும் வளர்ந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்க அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசாங்கத்திற்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Everyone should vote and strengthen democracy! : Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் ஆடம்பர கார் அணிவகுப்பு : ஒரே இடத்தில் குவிந்த High-tech கார்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Related News

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies