அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்! : பிரதமர் மோடி
Mar 22, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்! : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Sep 25, 2024, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 18-ம் தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட தேர்தலில் 61 புள்ளி 38 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து, ஜம்மு பிராந்தியத்தில் 11 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 15 தொகுதிகள் என 26 தொகுதிகளில் இரண்டாவது கட்டமாக வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

2-ம் கட்டத் தேர்தலில் சுமார் 25 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 3 ஆயிரத்து 502 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பாஜக மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா, அப்னி கட்சித் தலைவர் அல்டாஃப் புகாரி உள்ளிட்ட 239 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலைச் சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என்பதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், ராணுவ வீரர்கள், துணை ராணுவத்தினர், காவல் துறையினர் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், தீவிரவாதம் இல்லாத மற்றும் வளர்ந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்க அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசாங்கத்திற்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Everyone should vote and strengthen democracy! : Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் ஆடம்பர கார் அணிவகுப்பு : ஒரே இடத்தில் குவிந்த High-tech கார்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Related News

திருப்பத்தூர் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 4.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

ஹர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies