தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!
May 9, 2026, 10:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

Manikandan by Manikandan
Feb 3, 2026, 09:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேச பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்துவரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு சுமார் 7,84,678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது பாகிஸ்தான் அரசையும் அந்நாட்டு பாதுகாப்பு வல்லுனர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

2014 ஆம் ஆண்டு, பிரதமர் மோடி முதல் முறையாக பிரதமராக பொறுப்பேற்றது முதல், நாட்டின் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்து வருகிறது.

2014-ல் 2.29 லட்சம் கோடியாக இருந்த பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு, கடந்த நிதியாண்டில் 6.81 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், நாட்டின் பாதுகாப்புக்காக 7.85 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

 

இது வரும் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதமாகும். மேலும் கடந்த ஆண்டில் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை விட சுமார் 24 சதவீதம் அதிகமாகும்.

ராணுவத் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கும் இராணுவ தளவாடங்களை நவீனமயமாக்கவும் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இது தவிர முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின குடும்பத்தினரின் நலனுக்காக கடந்த நிதியாண்டை விட 45.49 சதவீதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

இது வழக்கமானதல்ல என்றும் இது இந்தியா எந்த அளவுக்குத் தேச பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை விமர்சகரான Qamar Cheema கமர் சீமா ஒரு காணொளியில் கூறியுள்ளார்.

இந்த பட்ஜெட் ஒதுக்கீடு, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி அழுத்தங்கள் இருந்த போதிலும் இந்தியா ரஷ்யாவின் சுகோய் 57 போன்ற மேம்பட்ட போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் என்பதை உறுதி படுத்துவதாக Qamar Cheema கமர் சீமா தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தியாவின் அதிரடி தாக்குதலைத் தாங்க முடியாமல் பாகிஸ்தான் கெஞ்சியதால் ஆப்ரேஷன் சிந்தூரை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூனில் பாகிஸ்தான் அரசு தனது மொத்த பட்ஜெட்டில் 14.5 சதவீதத்தை ஒதுக்கி நாட்டின் இராணுவப் பட்ஜெட்டை 20.2 சதவீதமாக அதிகரித்தது. அதாவது 428 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயாக இருந்த பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை 2,550 பில்லியன் ரூபாயாக அதிகரித்தது. இது பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.97 சதவீதம் ஆகும்.

உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக இருக்கும் இந்தியாவின் பட்ஜெட்டை பாகிஸ்தானுடன் ஒப்பிட முடியாது என்றாலும், இந்தியாவின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு பாகிஸ்தானைவிட ஒன்பது மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தியா இராணுவத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது, சீனாவை விட பாகிஸ்தானுக்கே அதிக சவால்களை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: budget 2026 armySecurity funding allocationpakistanindian armyworldbudget 2026
ShareTweetSendShare
Previous Post

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

Related News

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் நியமனம்; நாளை பதவியேற்பு

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி – நேரில் நலம் விசாரித்தார் மோகன் பாகவத்!

மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆடசி – முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!

தலைமை தாங்கும் தமிழர் – முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies