அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த 4 பேருக்கு, இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
அதிமுக-வைச் சேர்ந்த ஜெயகுமார், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர், தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், நான்கு தொகுதிகளிலும் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது குறித்து கட்சி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ராஜினாமா செய்தவர்களின் பெயர் தொகுதியில் மோசமாக உள்ளதால் மீண்டும் அவர்களுக்கே சீட் கொடுத்தால் தோல்விடையக் கூடும் என்பதால், அவர்களுக்கு மீண்டும் சீட் வழங்க முதலமைச்சர் விஜய் தயாராக இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், நம்பி வந்தோருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும், 4 பேருக்கும் வாரிய தலைவர் பதவியை தேர்வு செய்யுமாறு முதலமைச்சர் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், ஏமாற்றமடைந்த 4 பேரும் தங்களை அழைத்து வந்தவர்களுடன் சண்டையிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
















