கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவி விலகக் கோரி பெங்களூருவில் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முடா முறைகேடு வழக்கில் முதலமைச்சர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில், முடா முறைகேடு வழக்கில் தொடர்புடைய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவி விலகக் கோரி விதான சவுதா வளாகத்தில் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.