பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். அவர் நாளை காலை 11 மணி அளவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
அப்போது தமிழ்நாட்டுக்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் மற்றும் சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட பணிகளுக்கு க நிதி வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுப்பார் என தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறார். இ,தனைத்தொடர்ந்து நாளை மாலையே முதல்வர் சென்னை திரும்புகிறளார்.